ராமேஸ்வரம்: தமிழக மீனவா்கள் 6 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கே ரோந்து வந்த இலங்கை படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 6 பேரும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Source: Dinakaran