சென்னை: கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஒத்திவாக்கம் ஏரியில் செம்மண் அள்ள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஏரியைத் தூர் வாருவதாகக் கூறி அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளப்படுவதாக உமாபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை அடுத்து 4 வாரத்திற்குள் பதிலளிக்க காஞ்சிபுரம் ஆட்சியர், தமிழக அரசு நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Source: Dinakaran