பந்தலூர் ; பந்தலூர் அருகே கிளன்ராக் வனப்பகுதியில் நேற்று முன்தினம் தமிழக அதிவிரைவுப்படை போலீசார், மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கேரளா எல்லை பகுதியான முண்டேரி, காட்டிமட்டம் உள்ளிட்ட பகுதி வரை தீவிர ரோந்து பணியை அவர்கள் மேற்கொண்டனர். புதிய நபர்கள் யாரேனும் நடமாடினால் தகவல் தெரிவிக்கவேண்டும் என எல்லைப்பகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டனர்.
Source: Dinakaran