திருவண்ணாமலை : திருட்டுத்தனமாக புதிய படங்களை பதிவு செய்ததாக எழுப்பப்பட்ட புகாரையடுத்து 3 தியேட்டர்களின் புரஜெக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. செய்யாறில் புரஜெக்டர்களை கைப்பற்றி வேலூர் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலீஸ் நடவடிக்கையால் விஏபி, செல்லம், கன்னியப்பா தியேட்டர்களில் இரவு காட்சி ரத்து செய்யப்பட்டது. மேலும் புதிய படங்களை பதிவு செய்தார்களா என்ற புகாரில் மூன்று தியேட்டர்களின் ஆப்ரேட்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Source: Dinakaran