கன்னியாகுமரி : அனந்தமங்கலம் காட்டுவிளை பகுதியில் போலீஸ் உதவியுடன் சட்ட விரோதமாக கேரள மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனையடுத்து போலீசாரைக் கண்டித்தும், மது விற்பனைக்கு எதிராகவும் கிராம மக்கள் கறுப்புக் கொடியுடன் சாலை மறியல் போராட்டம் செய்து வருகின்றனர். மதுபானங்களை சாலையில் போட்டு உடைத்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Source: Dinakaran