திருச்சி : லால்குடி அருகே வெங்கடாஜலபுரத்தில் உறவினரால் தாய், மகன் வெட்டி கொலை செய்யப்பட்டனர். வீட்டில் தூங்கி கொண்டிருந்த செல்லப்பாப்பு அவரது மகன் சத்தியமூர்த்திக்கு சரமாரி அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. கொலை நடந்த போது வீட்டில் இருந்த செல்லப்பாப்புவின் சகோதரர் மகன் ராஜகோபாலிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source: Dinakaran