ராமேஸ்வரம்: நாகை அருகே கோடியக்கரை கடற்கரையிலிருந்து நேற்று 6 மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவுக்கும் நாகை கடற்பகுதிக்கும் இடையே இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது பிற்பகல் 3 மணியளவில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 6 பேரையும் படகுகளுடன் சிறைபிடித்தனர். பின்னர் காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.
Source: Dinakaran