குண்டர் சட்டத்தில் இருந்து ஒரே நாளில் 81 பேரை விடுவித்து உத்தரவு

0
21
Share on Facebook
Tweet on Twitter

மதுரை : ஒரே நாளில் 81 பேரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவுறுத்தலின்படி, ஐகோர்ட் மதுரை கிளையில் கோடை விடுமுறையிலும் சிறப்பு நீதிமன்றங்கள் நடந்து வருகின்றன. நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், சி.வி.கார்த்திகேயன் ஆகியோரது சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது. இதில், மனுதாரர் மற்றும் அரசுத்தரப்பு ஒப்புதலுடன் குண்டர் சட்ட உத்தரவுகளை ரத்து செய்யக்கோரும் 147 மனுக்கள் மட்டும் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.இதில், குற்றச்சாட்டுகளை உரிய மொழியில் மொழி பெயர்த்து தராதது, கருணை மனுக்களை உரிய காலத்தில் பரிசீலிக்காதது, இயந்திரத்தனமாக குண்டர் சட்ட உத்தரவுகளை பிறப்பித்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் 81 பேரின் மனுக்கள் மீதான குண்டர் சட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி குண்டர் சட்டத்தில் கைதான 81 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleதிருச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்ற பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவில் தள்ளுமுள்ளு
Next articleTamil GK For Government Exams – 0077

Leave a Reply Cancel reply