தமிழகத்தில் வெவ்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கி 8பேர் உயிரிழந்தனர்

0
18
Share on Facebook
Tweet on Twitter

காட்பாடி : தமிழகத்தில் வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி 8பேர் உயிரிழந்துள்ளனர்.  காட்பாடி கல்குவாரி குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3பேர் உயிரிழந்தனர். ஈசன்ஓடை என்ற இடத்தில் குட்டையில் மூழ்கி இறந்த 3பேரின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுப்பட்டு உடல்களை மீட்டனர்.கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்  சோகத்தை உண்டாகியுள்ளது . ஆற்றில் தேங்கியுள்ள நீரில் மீன் பிடிக்க சென்ற சென்ற ஆதவன்(6), ஹாசினி (7) மற்றும் தாய் மகேஸ்வரி ஆகியோர் உயிரிழந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகே சிற்றாறு -2 அணையில் மூழ்கி தமபதி உயிரிழந்தனர். நீரில் மூழ்கி உயிரிழந்த பாலச்சந்தர் (50) , விமலா (45) ஆகியோர் சென்னை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleபுதுச்சேரியில் மே 30-ல் ஓட்டல்கள் மூடப்படும்: ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
Next articleகூடுவாஞ்சேரி அருகே ஏரியில் செம்மண் அள்ள உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

Leave a Reply Cancel reply