தாராபுரத்தில் குடிநீர் வழங்கக் கோரி தூக்கு கயிறு மாட்டி பெண்கள் சாலை மறியல்

0
21
Share on Facebook
Tweet on Twitter

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிநீர் வழங்கக் கோரி தூக்கு கயிறு மாட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தில் கடந்த 6 மாதமாக குடிநீர் வழங்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர். மேலும் இதேபோல் தர்மபுரி, தேனி மாவட்டங்களிலும் குடிநீர் வழங்கவில்லை என்று பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்கக் கோரி தூக்கு கயிறு மாட்டி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் தாராபுரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Source: Dinakaran

SHARE
Facebook
Twitter
Previous articleகோவை பேரூர் அருகே ஒற்றை காட்டு யானை நடமாட்டம்
Next articleவேலூர் அருகே மக்கள் போராட்டத்தை அடுத்து டாஸ்மாக் கடை மூடல்

Leave a Reply Cancel reply